இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் கொரோனாவால் இந்த ஆண்டு முதல் மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் எட்டாம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

2024ல் கோவிட்-19 தொடர்புடைய 57 மரணங்கள் மலேசியாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஏற்பட்ட கோவிட்-19 மரணம் 2024 மே 26 இல் பதிவானது.

இவ்வாண்டு கோவிட்-19 நோயாளிகள் ஆறு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பதிப்பில் அனுப்பப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உயிரிழந்த நபர் இதய நோயாலும் நீரிழி நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் . அவர் இரண்டாம் தடுப்பூசி போடவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியது.

அவர்கள் அனைவரிடமும் இதர உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன .அவர்கள் கோவிட்டிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

மலேசியாவில் இதுவரை மொத்தம் 21,738 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.