பெற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CDAC ..!!

பெற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த CDAC ..!!

தேசிய குடும்ப தினத்திற்காக சீன சமூக சுய உதவி கவுன்சில் முதன்முறையாக “பெற்றோர்-குழந்தை வேடிக்கை திருவிழா” என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட கற்றுக் கொள்கின்றனர்.

மேலும் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவின் முக்கியத்துவத்தை அறியவும் உதவுகிறது.

இந்த நிகழ்வு இன்று (21.06.25) டான்ஜோங் கட்டோங்கில் உள்ள CDAC இன் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம், The LEGO Group மற்றும் உள்ளூர் oat milk brand OATSIDE உள்ளிட்ட கூட்டாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள 100 CDAC பயனாளி குடும்பங்கள் அழைக்கப்பட்டனர்.

இதில் பல்வேறு Lego-கருப்பொருள் கொண்ட விளையாட்டுகள் மற்றும் இருவழித்தொடர்பு செயல்பாடுகள் போன்றவை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், பெற்றோர்-குழந்தை உறவுகளை மேம்படுத்தவும் முடிந்தது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan