அடப்பாவிங்களா!!ஒரு சின்ன பூனையை இப்படியா கொடுமை படுத்துவீங்க!! என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
துவாஸ் கட்டுமான தளத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒரு பூனையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஒரு கட்டுமான தொழிலாளி மார்ச் 26 ஆம் தேதி இரவு 9.45 மணி முதல் 10.30 மணி வரை துவாஸில் உள்ள டெக்னோ பார்க் கிரசென்டில் உள்ள தொழிலாளர் உணவகத்தில் ஒரு பூனை குட்டியை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டி துன்புறுத்தியதாக விலங்குகள் வதை தடுப்பு சங்கம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி சங்கம் அந்த இடத்தை சோதனை செய்தது. அந்த பூனைக்குட்டி விடுவிக்கப்பட்டதாகவும் ஊழியருக்கு கடுமையான எச்சரிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.. இருப்பினும் நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை வழங்க மறுத்து விட்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்பவில்லை என்றும் சங்கம் கூறியது.
பின்னர் சங்கம் இந்த வழக்கை கையாள விலங்கு மற்றும் கால்நடை விவகார பிரிவுக்கு பரிந்துரைத்தது.