சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த Du Bochuan மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த தகவலை லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு(CPIB) இன்று(ஜூன் 26) வெளியிட்டது.

இந்த மாதம் 6 ஆம் தேதி டூ சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.அவருக்கு தடை விதிக்கப்பட்டபோது அவர் Seah Zhen Hui என்ற அதிகாரிக்கு $1000 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அதிகாரி அதை பெற மறுத்துள்ளார்.

டூ மீது சுமத்தபட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.