சிங்கப்பூரின் வர்த்தக எதிர்காலத்துக்கு புதிய டிஜிட்டல் முன்னேற்றம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) இடையிலான டிஜிட்டல் பொருளாதார ஒப்பந்தம் (EFTA–Singapore Digital Economy Agreement – ESDEA) குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.
இந்த ஒப்பந்தம், இருதரப்புகளுக்கும் இடையே திறந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது EFTA மற்றும் சிங்கப்பூருக்கிடையேயான டிஜிட்டல் இணைப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESDEA ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
♦️ எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களை எளிதாக்குதல்
♦️ மின்னணு பணம் செலுத்துதல், காகிதமில்லா வர்த்தகம், விலைப்பட்டியல் பரிமாற்றங்களை ஊக்குவித்தல்
♦️ வணிகச் செலவுகளை குறைத்தல் மற்றும் பரிவர்த்தனைகளை சீராக மாற்றுதல்
♦️ வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கான பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை ஏற்படுத்துதல்
சிங்கப்பூரும், EFTA நாடுகளுமான சுவிட்சர்லாந்து, நார்வே, இசுலாந்து மற்றும் லிசெட்டென்ஸ்டெய்னும், ஏற்கனவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உறவுகளை வளர்த்து வருகின்றன. இந்த புதிய டிஜிட்டல் பொருளாதார ஒப்பந்தம், அந்த உறவுகளை இன்னும் மேம்படுத்துவதுடன், இருதரப்புகளின் டிஜிட்டல் சந்தைகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் பெருக்குகிறது.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படுகிறது.
இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.