சிங்கப்பூரில் தரை தளத்தில் இறந்து கிடந்த இளைஞர்!! கொலையா? தற்கொலையா? எங்கே நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....
சிங்கப்பூரில் உள்ள தெலோக் பிளாங்காவில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் ஒரு ஆண் இறந்து கிடந்துள்ளார்.இச்சம்பவம் ஜூன் 28 ஆம் தேதி மதியம் சுமார் 1.15 மணியளவில் டெலோக் பிளாங்கா கிரெசென்ட் பிளாக் 17A இருந்து தகவல் வந்ததாக காவல்துறை 8world செய்தித்தளத்திடம் கூறியது.இச்சம்பவம் தொடர்பாக மனநலச் சட்டத்தின்கீழ் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் தரையில் கிடந்த ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது.