நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!!

நடிகை வனிதா விஜயகுமார் ,”வழக்கம்போல் பிக் பாஸ் review முடித்துவிட்டு இரவு சாப்பாடு முடித்துவிட்டு என்னுடைய sister வீட்டில் இருந்து கார் பார்க்கிங்க்கு சென்றேன். மணி 1 இருக்கும் அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் மீது பயங்கரமாக தாக்கினார்”.

வனிதா பிக் பாஸ் ரிவ்யூ போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் சிறு வயதில் நடந்த கோர சம்பவத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார்.

கடவுளுக்கு தெரியும் தாக்கியது யார் என்று. தாக்குதலின் போது அவர் நீங்கள் ‘பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்குறீங்களா ? அதற்கு நீ ஆதரவா? ‘என்று கூறி தாக்கினார். நான் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டேன்.

அந்த நேரத்தில் இருட்டில் முகத்தில் பயங்கரமாக தாக்கப்பட்டேன் எவரும் பக்கத்தில் இல்லை உடனே என்னுடைய sisterக்கு கால் செய்தேன். அவள் ஓடி அங்கு வந்து போலீசுக்கு புகார் அளிக்கலாம் என்றால் நான் இந்த process ல எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன்.

ரத்தம் சொட்ட சொட்ட இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்றேன்.

தாக்கிய நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவன் பைத்தியம் மாதிரி சிரித்தது என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் நான் எல்லாத்திலிருந்து கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன். இந்த நிலையில் நான் ஸ்கிரீன் முன்னாடி வர முடியாது. Disturbed people க்கு ஆதரவு அளிக்கிறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.ஆபத்து ரொம்ப பக்கத்துலயே இருக்கு வன்முறை என்பது சரியானது இல்லை. பிக் பாஸ் ஒரு கேம் ஷோ மட்டுமே என்று வனிதா விஜயகுமார் மிகவும் வருத்தமாக தெரிவித்துள்ளார்.