சிங்கப்பூர்ல இப்படி கூட கடத்தல் நடக்குதா..??

சிங்கப்பூர்ல இப்படி கூட கடத்தல் நடக்குதா..??

சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஒரு மோட்டார் சைக்கிளில் 400க்கும் மேற்பட்ட கடத்தப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றியது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய மலேசிய வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(30.09.25) அன்று நடைபெற்றது.

குடிவரவுத் துறையின் பேஸ்புக் பதிவில் கூறியதாவது, இந்த விசாரணை உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் நடைபெற்றது.

பின்னர் இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.