கடலோரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து..!!SFA எடுக்கும் அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உணவுத் துறை ஆணையம் (SFA), கடலோர மீன்பிடி தளங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்களை கையாள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் பயிற்சியை நடத்தியது.
இந்தப் பயிற்சி, கடலோர நீரில் பாசிகள் அதிக அளவில் பெருகும் போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், மீன்பிடி மற்றும் கடல் உணவு விநியோகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடத்தப்பட்டது.
அறிக்கையில், பாசிப் பூக்கள் கடல்நீரில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து மீன்களின் உயிரிழப்புக்கும், கடல் உணவுகளில் நச்சுப் பொருட்கள் உருவாவதற்கும் காரணமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் பிளாங்க்டன் அளவு, கரைந்த ஆக்ஸிஜன், குளோரோபில் போன்ற குறிகாட்டிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஏதேனும் மாற்றங்கள் கண்டறியப்பட்டால், மீன்பிடித் தளங்களுக்கு உடனடி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.இதனால் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.
SFA தெரிவித்ததாவது,“இந்தப் பயிற்சி உருவக சூழலில் நமது நடைமுறைகளைச் சோதிக்கவும், மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும் உதவியது. கடல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசரத் திறன்களை மேலும் வலுப்படுத்துவோம்”என்று கூறியது.
மேலும் இந்தப் பயிற்சியின் மூலம் கடலோர மீன்பிடி தளங்கள், அதிகாரிகள், மற்றும் வணிக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சோதிக்கப்பட்டன. இதன் மூலம் எதிர்கால கடல் பாசிப் பூக்கள் தாக்கங்களை குறைத்து, கடல் உணவின் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.