விபத்தில் உயிரிழந்த காதலி..!! காதலனுக்கு சிறைதண்டனை விடுத்த நீதிமன்றம்.!!!

விபத்தில் உயிரிழந்த காதலி..!! காதலனுக்கு சிறைதண்டனை விடுத்த நீதிமன்றம்.!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சாலை விபத்தில், காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய காரணமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநில நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின்படி, 45 வயதான சிங்கப்பூர் குடிமகன் ரஸ்மத் ஹிதாயத் பின் எடி ஜுஜு, 2023 மே 20ஆம் தேதி காலை 10.26 மணியளவில், தனது 36 வயது காதலியுடன் சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பயணத்தின் போது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த அவர், இரண்டாவது பாதையிலிருந்து முதல் பாதைக்குத் திடீரென மாறி, பின்னர் நடுத்தர தடுப்புச் சுவரில் மோதினார். இந்த விபத்தின் தாக்கத்தில், பின்இருக்கையில் அமர்ந்திருந்த காதலி தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, ஒரு மணி நேரத்திற்குள் அவர் உயிரிழந்தார்.

விபத்தில் பிரதிவாதிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், அவர் அதே நாளில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை மற்றும் எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், பிரதிவாதிக்கு முன்னதாகவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்ததும், அதற்காக சிறை மற்றும் பிரம்படி தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அவர் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். அந்த மறுவாழ்வு காலம் முடிவடையும் வரை காத்திருந்து, அதன் பின்னர் தான் தற்போதைய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK