ICA அதிகாரிகள் அதிரடி..! ₹20.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!!

ICA அதிகாரிகள் அதிரடி..! ₹20.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இல் S$30,000(Rs.20,44,200)க்கும் அதிகமான மதிப்புள்ள போகிமான் அட்டைகளை பறிமுதல் செய்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (10.10.25) சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் போது 25 வயது சிங்கப்பூரர் ஒருவர் அறிவிக்கத்தக்க எந்தப் பொருட்களும் இல்லை என்று மறுத்தார்.

ஆனால் அதிகாரிகள் அவரது பொருட்களை ஆய்வு செய்ததில் மொத்தம் S$30,000 மேல் மதிப்புள்ள போகிமான் அட்டைகள் நிறைந்த பல பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பதிவில் “அனைவரையும் பிடிக்க வேண்டும்” என்ற கிளாசிக் போகிமான் வாசகமும் இருந்தது.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

அதிகாரிகள் பொதுமக்களுக்கு கூறியதாவது, வெளிநாட்டில் வாங்கிய பொருட்கள், வரி இலவச வரம்புக்கு மேல் இருந்தால், நாட்டின் உள்ளே கொண்டு வரும்போது முன்னதாக அறிவித்து வரி செலுத்தப்பட வேண்டும். மேலும் இது குறித்து தெரியாமல் இருந்தால், சிவப்பு சேனல் மூலம் அறிவிக்கலாம் அல்லது சுங்கக் கவுண்டர் சென்று பரிசோதனை செய்து வரியை செலுத்தலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK