சிங்கப்பூர்: சட்ட அமைச்சர் அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
அதிகாரிகள் போல பொது மக்களிடம் உரையாடி பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டும், மேலும் ஆவண சரிபார்ப்புகளுக்காக அடையாள அட்டைகளையும் அதன் நகலையும் அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.
இந்த தகவல்களை வாட்ஸ் அப்பில் சேகரித்து சிங்பாஸ் கடவுச்சொல் மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லை வழங்குமாறு தகவல்களை சேகரித்துள்ளனர்.
மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பணத்தை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இந்த விவரங்களை சட்ட அமைச்சகமும் சிங்கப்பூர் காவல் படையும் ஒரு போட்டோ அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இது போன்ற மோசடிகளை நம்பி எந்த ஆவணங்களையும் தங்களுடைய அடையாள அட்டைகளையும் அல்லது கடவுச்சொல்லையும் தெரிவிக்க வேண்டாம் என்று பொதுமக்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.