👉 என்ன அங்கீகாரம் தெரியுமா? இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் சர்வதேச அளவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கவுன்சிலில் உறுப்பினராக மீண்டும் தேர்வாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கனடாவின் மாண்ட்ரீலில் நேற்று (27.09.25) நடைபெற்ற 42வது சட்டமன்றத் தேர்தலில் சிங்கப்பூர் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் தூதுக்குழுவை போக்குவரத்து அமைச்சரும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான திரு. சியோவ் சின் சியோங் தலைமை தாங்கினார்.
அவர் கூறுகையில், “ICAOவின் வலுவான சர்வதேச தலைமை மற்றும் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு,உலகளாவிய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கு வழிவகுக்கும். அனைத்து நாடுகளின் நலனுக்காக பங்களிக்க சிங்கப்பூர் எப்போதும் தயாராக உள்ளது” என்றார்.
2003 ஆம் ஆண்டு முதன்முதலில் ICAO சபைக்கு தேர்வான சிங்கப்பூர், அதன் பிறகு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் நடைபெறும் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.