போக்குவரத்து அதிகாரியை தவறாக நடத்த முயன்ற நபர் கைது..!!

போக்குவரத்து அதிகாரியை தவறாக நடத்த முயன்ற நபர் கைது..!!

மலேசியாவில் 44 வயதுடைய லீ கெஹ் மெங் என்ற நபர், போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவருக்கு 50 ரிங்கிட் லஞ்சம்(S$11) வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அக்டோபர் 23 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

அவர், போக்குவரத்து காவல்துறை அதிகாரி சார்ஜென்ட் அகமது ஹபீஸ் பின் அப்துல் சுகூருக்கு 50 ரிங்கிட் லஞ்சம் கொடுத்து, அங்கீகரிக்கப்படாத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டதாக புகார் அளிக்க வேண்டாம் என முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே லஞ்சம் வாங்க மறுத்து, உடனடியாக சிங்கப்பூர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.

பின்னர் வழக்கு ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகத்திற்கு மாற்றப்பட்டது.

பிரதிவாதி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது $100,000 வரை அபராதம்,அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK