சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் விரைவில் புதியதோர் அம்சம்!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் விரைவில் புதியதோர் அம்சம்!!

சாங்கி விமான நிலையத்தில் டெர்மினல் 2-இல் இண்டிகோ பூட்டிக் பிராண்ட் ஹோட்டலின் கீழ் புதிய ஹோட்டல் திறக்கப்பட உள்ளது. அது சுமார் 255 புதிய அறைகளை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.அது 2028 ஆம் ஆண்டு திறக்கப்படும்.

ஏப்ரல் 26 அன்று, புதிய ஹோட்டலை குத்தகைக்கு விடுவதற்கு ரியல் எஸ்டேட் குழுவான OUE லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.இதனை ஏர்போர்ட் ஆபரேட்டர் சாங்கி குரூப் வழங்கியது.

சிங்கப்பூரின் முதல் “ஹீரோ எனர்ஜி” ஹோட்டலாக இண்டிகோ சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஹோட்டல் திகழ்கிறது.

புதிதாக திறக்கப்பட உள்ள ஹோட்டல் விமான நிலையத்தின் மூன்றாவது பிரதான ஹோட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஹோட்டல் 163 மீ நீளம் கொண்டது. ஓடுபாதை, விமான நிலைய பவுல்வர்டு மற்றும் ஸ்கைலைன் உள்ளிட்டவைகளும் இடம்பெறும்
. அத்தோடு விசாலமான கூரை டே கிளப், பார் மற்றும் இன்ஃபினிட்டி பூல் வசதிகளும் வழங்கப்படும்.

இதனை CAG மற்றும் OUE தெரிவித்தது.

இது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.

இந்த புதிய ஹோட்டல் 2027 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் போக்குவரத்து தேவை தற்போது உயர்ந்து வருகிறது.

இந்த புதிய ஹோட்டலில் பயணிகளுக்கு விருந்தோம்பல் சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஜனவரி முதல் மார்ச் வரை 16.5 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வருகைப் புரிந்துள்ளனர்.

விமானநிலைய ஆபரேட்டர்கள், மறு கட்டமைத்தல் மற்றும் மேலும் விரிவாக்குவதற்கான ஆய்வு செய்ய விரும்புவதாக ஏப்ரல் 12-ஆம் தேதி CAG அறிவித்தது.