PSLE தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வு (PSLE) முடிவுகள் இன்று (25.11.25) வெளியிடப்பட்டன. மொத்தம் 98.5% மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆண்டில் மொத்தம் 37,926 மாணவர்கள் PSLE தேர்வில் பங்கேற்றனர். பாட அடிப்படையிலான வகுப்பு முறையின் கீழ் (Subject-Based Banding), PG1 மற்றும் PG2 க்கு தகுதி பெற்ற மாணவர்களில் சுமார் 65% பேர் மேல்நிலைப் பள்ளியில் சேரும் போது குறைந்தது ஒரு உயர்நிலைப் பாடத்தையாவது எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் ஆன்லைன் படிவம் 1 இணைய அமைப்பு இன்று காலை 11:30 மணிக்கு திறக்கப்பட்டது. இது டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும்.
மேல்நிலைப் பள்ளி ஒதுக்கீட்டு முடிவுகள் டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.