சிங்கப்பூரில் முதன் முறையாக சாலை காட்சி அறிமுகம்..!!

சிங்கப்பூரில் முதன் முறையாக சாலை காட்சி அறிமுகம்..!!

சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய முயற்சி கையாளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் முற்பாதியில் சுமார் 19,600 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இந்த மோசடி சம்பவங்கள் மூலமாக 456 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருப்பதை ஊக்குவிக்கும் விதமாக சாலை காட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

முக்கியமாக சந்தேகப்படும்படியான தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் எப்படி கண்டறிவது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சி முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

இரு வழி தொடர்பு காட்சிகள், விளையாட்டுகள் கற்றல் நடவடிக்கைகள், மேடை நிகழ்ச்சிகள் என பல வழிகளில் சாலை காட்சிகளை காண முடியும்.

முதல்முறையாக சிங்கப்பூரில் மோசடிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய அளவிலான சாலை காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலை காட்சியானது நேற்று (08/11/2025) மற்றும் இன்று (09/11/2025) தோ பாயோ HDB hub என்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK