பாஸ்டர் ரிஸ் பகுதியில் உள்ள மீன் கடையில் திருட்டு..!!! குற்றவாளி பிடிபட்டது எப்படி..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள D’Best Recreation மீன்பிடி குளத்திற்குள் புகுந்து, மொத்தம் $114 மதிப்புள்ள மூன்று குரூப்பர் மீன்களை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் நவம்பர் 20 ஆம் தேதி அதிகாலை 3.22 மணிக்கு நடந்தது.
நிறுவனத்தின் பொது மேலாளர் கூறியதாவது, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் வேலியைத் தாண்டி உள்ளே நுழைந்து மீன்களை எடுத்துச் சென்றனர்.
ஒவ்வொன்றும் சுமார் 1 கிலோகிராம் எடையுள்ளவை. அதன் சந்தை மதிப்பு S$38 மொத்தம் S$114 வெள்ளி என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள் துரத்தியபோது, அவர்கள் ஒரு மீனை தரையில் வீசிச் சென்றனர்.அது பின்னர் இறந்தது.
இந்த மூவரும் திருட்டுச் செய்தது இது முதல் முறை அல்ல என்று திரு. ஹுவாங் தெரிவித்தார். “அவர்களின் முதல் குற்றம் செப்டம்பர் நடுப்பகுதியில் நடந்தது.இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மீன் திருட உள்ளே நுழைந்தனர். முதல் இரண்டு முறை மட்டுமே நாங்கள் அவர்களுக்கு வாய்மொழி எச்சரிக்கைகளை வழங்கினோம்.ஆனால் அவர்கள் துணிச்சலானவர்களாக மாறி, நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று நினைத்தார்கள்” என்று அவர் கூறினார்.
மற்ற தரப்பினர் மீண்டும் குற்றத்தைச் செய்வதைத் தடுக்கும் நம்பிக்கையில் காவல்துறையை அழைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து CCTV காட்சிகள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டன.அதில் குற்றவாளிகள் திருடும் காட்சிகளும், சிலர் இ-சிகரெட் புகைப்பதும் பதிவாகியிருந்தது.