பரபரப்பு..!! டன்லப் தெருவில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!

பரபரப்பு..!! டன்லப் தெருவில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டன்லப் தெருவில் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் வழக்கில் போலீசார் 20 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

போலீசார் வெளியிட்ட அறிக்கையின் படி, சம்பவம் நவம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 3.55 மணியளவில் நடந்தது.

ஒரு நபர் 28 வயது பாதிக்கப்பட்ட நபரை சந்துக்குள் இழுத்துச் சென்று, அவரைத் தாக்கி பணம் கொடுக்குமாறு மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இறுதியில் பாதிக்கப்பட்டவர் சுமார் S$190 பணத்தை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

காயமடைந்தவர் சுயநினைவுடன் இருந்தபோதும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 22 வயது சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிசெய்து, புகார் கிடைத்த 20 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

குற்றம் நடந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகளும் மீட்கப்பட்டன.

சந்தேக நபர் மீது இன்று (10.11.25)குற்றம் சாட்டப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK