உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..?

சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர்.

இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு சப்ளையரான புட்டியன் நிறுவனத்துடன் தொடர்பில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

யுன்ஹாய்சியாங் நிறுவனம் வழங்கிய வறுத்த கோழியில் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியா இருப்பதும், நார்த்பாயிண்ட் நகரத்தில் உள்ள கடையில் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் கண்டறியப்பட்டதும் உணவுப் பாதுகாப்பு மீறலாக பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை மீளாய்வு செய்து, புதிய சட்டங்களை படிப்படியாக செயல்படுத்த உள்ளதாக கூறினார். உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், மக்கள் நலனே முதன்மை எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய மசோதா 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து 2028 வரை கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

இதில் மிகக் கடுமையான உணவுப் பாதுகாப்பு மீறல்களுக்கு S$9,250 வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan