நாளை சிங்கப்பூருக்கு வருகை தரும் தென்கொரிய அதிபர்..!! காரணம்..?

நாளை சிங்கப்பூருக்கு வருகை தரும் தென்கொரிய அதிபர்..!! காரணம்..?

சிங்கப்பூர்: தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பின் பேரில் நாளை(01.03.26) சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் இருநாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அவரது பயணத்தின் போது, வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, சுற்றுச்சூழல் மற்றும் பொதுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட உள்ளது.
இது இருநாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியாகும்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் லீ ஜே மியுங் தனது மனைவி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சிங்கப்பூருக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பரில் நிறுவப்பட்ட சிங்கப்பூர்–தென் கொரியா மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வாய்ப்பையும் இந்தப் பயணம் வழங்குகிறது.

அடுத்த திங்கட்கிழமை(02.03.26)நடைபெறும் வரவேற்பு விழாவில் அவர் கலந்து கொள்வதுடன், அவரையும் அவரது மனைவியையும் நினைவுகூரும் வகையில் ஒரு ஆர்க்கிட் மலருக்கு பெயரிடும் நிகழ்விலும் பங்கேற்பார். மேலும், அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் மதிய உணவில் கலந்துகொள்வார்.

அன்று மாலை, அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவரை வரவேற்க அரசு விருந்தை வழங்குகிறார். இந்தச் சந்திப்புகள் இருநாடுகளுக்கிடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 3 அன்று சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்த பின்னர், லீ ஜே மியுங் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தனது பயணத்தைத் தொடருவார்.
இந்தப் பயணம் ஆசிய பிராந்தியத்தில் தென் கொரியாவின் உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK