சிங்கப்பூரில் லீ கட்டிடத்தின் கூரை சரிந்தது!!! அதிர்ச்சியில் விழுந்த கர்ப்பிணி பெண்..!!!
சிங்கப்பூரில் இன்று (12/09/2025) மதியம் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ரெட் ப்ளாசாவில் திடீரென கூரை இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
கூரை இடிந்து விழுந்த அதிர்ச்சியில் அங்கிருந்த கர்ப்பிணி பெண் தரையில் விழுந்தார்.
இன்று (12/09/2025) மாலை இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சேனல் எட்டு நியூஸ் நெட்வொர்க் செய்து வெளியிட்டது. முதல் மாடியில் ஸ்டார்பக்ஸ் அடுத்த நுழைவாயிலில் படிக்கட்டுகளுக்கு மேலே உள்ள முழு கூரையும் திடீரென இடைந்து விழுந்ததை அருகில் உள்ள மக்கள் பயந்துள்ளனர்.
அருகில் இருந்த மாணவர்கள் உதவ முன்வந்து ஒன்றாக கூரையை தூக்கினர்.
14 வயது மாணவி ஒருவருடைய தலை மற்றும் மூக்கில் காயங்கள் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் அருகில் அந்த வழியாக சென்ற கர்ப்பிணி பெண் பயந்து தரையில் வீழ்ந்தார்.
இரண்டு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் மற்றொருவர் கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அனுப்பப்பட்டுள்ளது என சிவில் பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.