சாங்கி விமான நிலையத்தில் திருட்டு...!! 25 வயது இந்தியர் கைது...!!
சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய முனையம் 3-இல் உள்ள ஒரு கடையில் இருந்து $1,500-க்கும் அதிக மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாக 25 வயது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் தகவலின்படி, கடந்த மாதம் 16ஆம் தேதி மதியம் 1:40 மணியளவில் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டது. விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகநபரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு, அவர் நாட்டை விட்டு புறப்படும் முன் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.