சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(2025) பரபரப்பான நாளாக இருந்ததன் காரணம் என்ன..??

சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(2025) பரபரப்பான நாளாக இருந்ததன் காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 20ஆம் தேதி பரபரப்பான நாளாக கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
டிசம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 6.3 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமை அன்று சாங்கி விமான நிலையம் கிட்டத்தட்ட 2,23,000 பயணிகளுக்கு சேவை அளித்து வந்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் அதிக பயணிகள் எந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர்?
முதல் இடத்தில் சீனா, அடுத்த இடத்தில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு சாங்கி விமான நிலையத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 70 மில்லியன் பயணிகள் வருகை அளித்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய ஆண்டை (2024) ஒப்பிடும்போது கடந்த ஆண்டு (2025) 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதிலும் முக்கியமாக கடந்த ஆண்டு சாயங்கிய விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பான நாளாக டிசம்பர் 20, 2025 தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகமான விமான பயணங்கள் எந்தெந்த ஊருக்கு மேற்கொள்ளப்பட்டது?
கோலாலம்பூர், பாங்காங், ஜக்கர்த்தா, பாலி, ஹாங்காங் ஆகிய நகரங்களாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK