ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!!
ஏர் இந்திய விமானம் 171(போயிங் 787) அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற போது கடந்த ஆண்டு(2025)ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி விபத்து நடந்த ஓராண்டிற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் விமான விபத்து புலனாய்வு பிரிவு இந்த காலக்கெடுவை தவறவிட்டது.
இறுதி அறிக்கை வெளியாக மேலும் மூன்று மாதங்கள் தாமதமாகும் என தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் நடந்து வரும் GE Aerospace நிறுவனத்தின் என்ஜின் பாகங்கள் பிரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பணிகள் இன்னும் முடிவடையாமல் இருந்ததில் தாமதத்திற்கு காரணம் எனனு தெரியவந்துள்ளது.
இறுதி அறிக்கை வெளியிடுவதில் தாமதமாவதால் விதிகளின்படி தற்போதைய நிலவரத்தை விளக்கும் இடைக்கால நிலை அறிக்கை ஒன்றை AAIB இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பெழுந்துள்ளது.