சிங்கப்பூரில் 5 கனரக வாகன ஓட்டுநர்கள் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??

சிங்கப்பூரில் 5 கனரக வாகன ஓட்டுநர்கள் மீது பாய்ந்த வழக்கு..!! காரணம்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து கனரக வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் நாளை (28.10.25) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளனர்.

33 முதல் 42 வயதுக்குட்பட்ட இந்த ஓட்டுநர்கள், அதிகாரிகள் நிர்ணயித்த வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய வாகனங்களை இயக்கியிருந்தாலும், அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் அறிக்கையின் படி, இந்த ஆண்டு மே மாத இறுதியில் மற்றும் ஜூன் மாதங்களில் ஷீயர்ஸ் சாலையில் மூன்று பேருந்து ஓட்டுநர்கள் வேகமாகச் சென்றது பதிவாகியுள்ளது. இதில் 33 வயது ஓட்டுநர் ஒருவர் மணிக்கு 60 கிலோமீட்டர் வரம்பை மீறி,மணிக்கு 76 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

தனித்தனியாக, பான் தீவு விரைவுச்சாலை (PIE) மற்றும் புக்கிட் திமா விரைவுச்சாலை (BKE) பகுதிகளில் இரு பேருந்து ஓட்டுநர்களும் அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு $1,000 வரை அபராதம், அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிந்தால், $2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.மேலும்,குற்றவாளிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK