கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!!

கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கோவான் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று(02.03.36) மதியம் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர்களில் சிலர் லேசான தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் மருத்துவமனையில் இருந்து இன்று(03.03.26) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்து குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து ஆரம்ப கட்ட விசாரணையில், இது தீ வைப்பு சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 64 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK