மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் எஸ். கிருஷ்ணன் இது குறித்த கூறியது, பந்தயம் கட்டி விளையாடப்படும் இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஏற்கனவே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறமையை வெளிப்படுத்துகின்ற, E-Sports ஆரோக்கியமான சமூக விளையாட்டுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
இந்த புதிய சட்ட வரைமுறை மூலமாக, ஆன்லைன் விளையாட்டு துறையில் உள்ள வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அதே வேளையில் தேவையற்ற கெடுபிடிகளை குறைத்து, E-Sports துறையை மென்மேலும் வளர்ப்பதற்காகவும் மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.