இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.
நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பகுதியில் வாகனப் போக்குவரத்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த 56 வயது நபரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வலது தடத்தில் 32 வயது சிங்கப்பூர் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இருவரும் குலாய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து குலாய் காவல் துறை துணை ஆணையர் டான் செங் லீ க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.