சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!!
சிம் கார்டுகளை மோசடி கும்பல்களுக்கு விநியோகம் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.அந்த இளைஞர் சிம் கார்டு சம்மந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் பெயர்களில் சிம் கார்டுகளை பதிவு செய்யுமாறு அந்த இளைஞர் கேட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணை கூறுகிறது.
அந்த இளைஞரை மோசடி ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு செய்தனர்.
நவம்பர் 2024 மற்றும் பிப்ரவரி 2025 க்கு இடையில் அந்த இளைஞர் சில மாணவர்களின் விவரங்களைப் பயன்படுத்தி சிம் கார்டுகளைப் பதிவுசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று(ஏப்ரல் 17) நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்,அதிகபட்சமாக 10000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.