சிங்கப்பூரில் இன்று தேர்தல்!! தனது வாக்கை செலுத்திய சிங்கப்பூர் பிரதமர்!!

சிங்கப்பூரில் இன்று தேர்தல்!! தனது வாக்கை செலுத்திய சிங்கப்பூர் பிரதமர்!!

சிங்கப்பூரில் இன்று காலை 8 மணியளவில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது.பலரும் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் நண்பகல் 12 மணியளவில் தனது மனைவியுடன் Evans ரோட்டில் உள்ள கல்வியமைச்சகத்தின் தலைமையகத்துக்கு சென்று வாக்களித்தார்.

அது தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான வாக்களிப்பு நிலையம்.

இது திரு. வோங் பிரதமராக பதிவியேற்ற பிறகு போட்டியிடும் முதல் தேர்தல்.

மதியம் 12 மணி நிலவரப்படி சுமார் 48 சதவீத வாக்காளர்கள் தங்கள் கடமையை ஆற்றியுள்ளனர்.

இன்று இரவு 8 மணி வரை வாக்களிப்பு நடைபெறும்.