ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராட் கோலி இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
2025 முதல் 2027 வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து அவரும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்ராபி தொடரிலும் ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக ரன்களை குவித்து வரும் விராட் கோலி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி தனது ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
