தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!!

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்...!!!

சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த கட்டிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.

18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் உள்ள இரண்டு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் (மே 9) தீப்பிடித்தது.

கட்டிடத்தின் சில கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டிடத்தின் எஃகு கூரை சேதமடைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டிடம் நிலையானதாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக கட்டிடத்தை மூட முடிவு செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் நிலையை விரிவாக ஆய்வு செய்ய ஒரு பொறியாளரை நியமிக்குமாறு கட்டிட உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்டிடத்திற்கு தேவையான புதுப்பித்தல் குறித்து பொறியாளர் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதால் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறியது.

சீமெய் ஸ்டிரீட் 3இல்  உள்ள சாங்கி பொது மருத்துவமனையிலிருந்து தெம்பனிஸ் அவென்யூ 1இல் உள்ள தெமாசெக் பாலிடெக்னிக் கல்லூரி வரை அடர்ந்த புகை காணப்பட்டதாக கூறப்படுகிறது.