
ராபர்ட்சன் கீ பகுதியில் ஒரு பெண்ணை நீர்நாய் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(மார்ச் 11) சிங்கப்பூர் ஆற்றோரத்தில் நடந்ததாக தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.நீர்நாய் பாதுகாப்புக் குழுவான ஓட்டர் பணிக்குழு, அந்தப் பெண்ணுக்கு உதவியதாகக் கூறியது.பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குழு கூறியது.
தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!
ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாய்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் காணப்படுகின்றன.சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.நீர்நாய்கள் பொதுவாக தனக்கு ஆபத்து நேரிடும் என்று நினைக்கும் போது மட்டுமே மனிதர்களை தாக்கும்.
எனவே அப்பகுதியில் நீர்நாய்களைக் கண்டால் பொதுமக்கள் அவற்றை அணுக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
