அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!!

அமெரிக்காவின் பால் மற்றும் தானிய ஏற்றுமதி குறித்து இந்திய விவசாயிகள் கவலை..!!

இந்தியாவிற்கு பால் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவின் திட்டங்களால் இந்திய விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

புதுடெல்லியுடன் அதன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் அமெரிக்க பால் மற்றும் தானிய பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அழுத்தம் கொடுக்கிறது.

வர்த்தக பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை இந்தியா குறைக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது இந்திய விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இந்திய விவசாயிகள் பெரும்பாலும் ஏழைகள், மாதத்திற்கு சராசரியாக $160 (சுமார் S$207) சம்பாதிக்கிறார்கள்.

அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை இந்தியா குறைத்தால், அது இந்தியர்களுக்கான போட்டியை அதிகரிக்கும். இதனால் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வது கடினமாக்கும்.

அமெரிக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் குறைந்த விலையில் அதிக அளவு விவசாயப் பொருட்களை விற்க முடியும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, விவசாயத் துறையைப் பாதிக்கக்கூடிய எந்த முடிவையும் இந்திய அரசு எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.