ஸ்பெயினில் கொலை செய்யப்பட்ட சிங்கப்பூர் பெண்ணின் வழக்கு..!!!

சிங்கப்பூர் :ஸ்பெயினில் 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான கட்டிடக்கலைஞர் திருமதி ஃபாங், ஏப்ரல் 10, 2024 அன்று அபானிலா நகரில் லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இறந்து கிடந்தார்.
அவர் ஏப்ரல் 4 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் உள்ள சாபியாவுக்கு தனியாகப் பயணிக்க புறப்பட்டார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வரவிருந்தார். ஆனால் ஏப்ரல் 10 ஆம் தேதி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது உடல் கத்தி காயங்கள் மற்றும் தலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்று ஆறு நாட்களுக்குப் பிறகு ஓங் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக நபரான மிட்செல் ஓங்கை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரின் உரிமைகள் குறித்த ஸ்பானிஷ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை விண்ணப்பம் பூர்த்தி செய்யவில்லை என்று நீதிபதி கூறினார்.
ஓங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்ததால் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை அரசு வழக்கறிஞர்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட திருமதி ஆட்ரி ஃபாங்கின் குடும்பத்தினரின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஓங் இன்று வழக்கில் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan