இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!!

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!!

முதியோர் நலனில் அக்கறை கொண்ட சன்லவ் ஹோம், இளைஞர்களையும் தனது பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறது.

இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், முதியோர் பராமரிப்பில் அவர்கள் எவ்வாறு அதிகமாக ஈடுபடலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த இல்லம் சமீபத்தில் ஒரு கருப்பொருள் கலந்துரையாடலை நடத்தியது.

அங் மோ கியோவிலுள்ள சன் லைப் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் மே 10 ஆம் தேதி நடைபெற்ற உரையாடலில் கிட்டத்தட்ட 14 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பலர் ரிபப்ளிக் பாலிடெக்னிக்கைச் சேர்ந்தவர்கள்.

இதில் இளைஞர்களின் மன ஆரோக்கியம் மற்றும் தனிமை போன்ற பிரச்சினைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.

“இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே எங்கள் நோக்கமாக இருந்தது” என்று திருவாட்டி இந்திரா கூறினார்.

அதிகாரிகள் மற்றும் வணிக கூட்டாளர்களுடன் பணியாற்ற வாய்ப்புள்ள இளைஞர்களின் தலைமைத்துவ திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது என்றார்.

பல வருடங்களாக விமான நிலையத்திற்குச் செல்லாத முதியவர்கள்,ஜுவல் சாங்கியின் மிக அழகான அம்சங்களான மழைக்காடுகளையும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக திருவாட்டி இந்திரா உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.