விமானத்தில் சக பயணியின் உடைமைகளை திருடியதாக இருவர் கைது!!

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் சக பயணியின் உடமைகளை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
35 வயதுடைய நபர் ஒருவர் ஒரு பெண்ணின் பையில் இருந்து பொருட்களை எடுப்பதை சக பயணிகளில் இருவர் கண்டுள்ளனர்.
விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த பையை ஒரு பெண் எடுப்பதை கண்ட அவர்கள் அந்த பையின் உரிமையாளர் அவர்கள் கண்ட நபர் அல்ல என்பதை உணர்ந்தனர்.
அவர்கள் உடனே காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தனர்.
CCTV இல் பதிவான காட்சிகளைக் கொண்டு விமானநிலையக் காவல்துறை அந்த நபரை அடையாளம் கண்டனர்.
அவருடன் சேர்ந்து செயல்பட்டு துணை புரிந்ததாக ஒரு 40 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 169 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அந்த பெண் பயணியின் இரண்டு கடன்பற்று அட்டைகளும் மீட்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அந்த இரண்டு நபர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan