சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்படத் திட்டம்...!!!
சிங்கப்பூரும் பிலிப்பைன்ஸும் பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்பட திட்டமிட்டுள்ளது.
அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் அரசுத் துறை மேம்பாடு போன்றவை அடங்கும்.
பிரதமர் வோங்கின் பிலிப்பைன்ஸ் அறிமுகப் பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இரு தலைவர்களும் சந்தித்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், திரு. வோங், தன்னை அழைத்ததற்காக திரு. மோர்கோஸுக்கு நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூர்-பிலிப்பைன்ஸ் இருதரப்பு உறவைப் திரு. வோங் பாராட்டி பேசினார்.
மேலும் இந்தச் சந்திப்பில் கூடுதலாக ஆசியான் மின் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஆசியான் பவர் ஹப் அதன் 10 உறுப்பு நாடுகளின் மின்சார உள்கட்டமைப்புகளை 2045 ஆம் ஆண்டுக்குள் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இது அவற்றுக்கிடையே எல்லை தாண்டிய மின் பகிர்வை செயல்படுத்துகிறது.
நீடித்த நிலைத்தன்மையைப் பொறுத்தவரை,இரு நாடுகளும் ஒரு கரிமப் புள்ளிப் பகிர்வு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.