சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!!

சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கடையில் இருந்து பொருட்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இந்தியப் பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி சுமார் 2.30 மணியளவில் இது குறித்து தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.
அதன் பின் காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர்.
cctv இல் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதன் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டதாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது.
அவர்கள் இருவரும் சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்கு முன் காவல்துறை மடக்கி பிடித்தது.
அவர்களிடம் இருந்து புதிய பணப்பை,வாசனைத் திரவியம் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
திருடப்பட்டதாக கூறப்படும் பொருட்களின் மதிப்பு 635 வெள்ளி என்று 8 world செய்தித்தளம் சொன்னது.
ஜூன் 10 ஆம் தேதி (நாளை) அவர்கள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan