HDB குடியிருப்பில் நடக்கும் சம்பவம்!! என்ன நடக்கிறது? ஆன்லைனில் பரவும் எச்சரிக்கை பதிவு!!

HDB குடியிருப்புகளில் நடக்கும் சம்பவம்!! என்ன நடக்கிறது?

சிங்கப்பூர்: யிஷூனில் உள்ள சோங் பாங் HDB அடுக்குமாடி குடியிருப்பில் கழிப்பறை கூரை இடிந்து விழுந்து உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் மகளான சிட்டி நூர்ஹாஷிகின் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது.

கழிப்பறை கூரை இடிந்து தனது தந்தையின் தலை மீது விழுந்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரின் தலையில் 10 தையல்கள் போடப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

 

மேலும் இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க பழைய வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் நிலையை சரிபார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே HDB அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாக கூறப்படும் ஒரு இணையவாசி, இதேபோன்று தனது வீட்டிலும் சமையலறையின் கூரையும் இடிந்து விழுந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது தாயார் அந்த நேரத்தில் சமைக்க அங்கு நிற்கவில்லை என்ற ஒரு செய்தியை வெளியிட்டார்.

 

சம்பவம் நடந்தது எப்படி..??

நேற்று முன்தினம் (19 ஆம் தேதி) அதிகாலை பாதிக்கப்பட்டவர் காலை தொழுகைக்குத் தயாராவதற்காக 4:30 முதல் 5:00 மணி அளவில் கழிப்பறைக்குச் சென்றார்.

அவர் கழிப்பறையில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூரை திடீரென பெயர்ந்து அவரது தலை மீது விழுந்தது. இதனால் அவரது அவரது தலையில் பத்து தையல்களும், தோள்கள் மற்றும் முழங்கால்களில் காயங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை (20.06.25) பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வீட்டுவசதி ஆணையம் மற்றும் காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan