அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!!

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வீட்டுப்பாடம் செய்ததற்காக தனக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று ஒரு பல்கலைக்கழக மாணவர் கூறியுள்ளார்.

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவர், அவ்வாறு செய்த மற்ற மாணவர்களும் இதேபோல் தண்டிக்கப்பட்டனர் என்று ஒரு சமூக வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போக்கு இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது என்று அவர் கூறினார்.

இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிகளை அமல்படுத்தினாலும், மாணவர்கள் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு செயலிகள் வழங்கும் பதில்களை சிறிது மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர்கள் நினைத்ததாக மாணவர் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து உயர்கல்வி மாணவர்கள் இடையே எடுத்த கணக்கெடுப்பில்,சிலர் மாற்றுக் கருத்துக்களை வழங்கினர்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தகவல்களைத் தேடுவதில் தவறில்லை என்றாலும், ஒருவர் சுய சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செயலி வழங்கும் பதில்களை எளிமையாகப் பயன்படுத்தும் அணுகுமுறை கவலை அளிப்பதாக அவர்கள் கூறினர்.