தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 70 வயதுடைய ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளிடம் இருமுறை அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
தற்போது 30 வயதுடைய அந்தப் பெண், தந்தையின் செயல்களால் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, 21வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது தந்தையின் தவறுகளை அம்பலப்படுத்த முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தப் பெண் 2015ல் வீட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் படித்துப் 2019ல் சிங்கப்பூருக்கு திரும்பினார்.
நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் தாய், தந்தை மற்றும் மகளுக்கிடையே நெருக்கமான உறவு இருந்ததாக கூறினார்.
மேலும் அவர் தனது கணவரை “அன்பான தந்தை” என்றும் விவரித்தார். தனது கணவர் தனது மகளுக்கு தகாத முறையில் எதையும் செய்ததை தான் பார்த்ததில்லை என்றும், ஆனால் தனது மகள் சிறு வயதிலேயே சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை பெற்றதை நினைவில் வைத்திருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிபதி, பெண்ணின் சாட்சியம் நம்பகமானது என்றும், இரு சம்பவங்களும் தெளிவாகவும், உறுதிப்படையும் விளக்கப்பட்டன என்றும் மதிப்பிட்டார்.