செல்போன் மோகத்தால் வாழ்க்கையே தொலைத்த இந்திய தொழிலாளி..!!
சிங்கப்பூர்: இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் செல்போனை பார்த்தபடி லாரி ஓட்டிச் சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சென் யூ-லின் (70) உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு (07.07.23) மேல் தாம்சன் சாலையில் நடந்தது. லாரியை ஓட்டிச் சென்ற நடராஜன் மோகன்ராஜ் (28) மூன்று பாதைகளை திடீரென மாற்றிச் சென்று கொண்டிருந்தபோது, கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த மொபைல் போனைப் பார்த்தார். கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. பின்னர் எதிர் பாதையில் பாய்ந்து கருப்பு நிற காரில் மோதியது
இந்த வன்முறை மோதலால் சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டது. கார் மேலும் ஒரு லாரி, தனியார் பேருந்து மீது மோதியது. பேராசிரியர் சென் யூ-லின் காருக்குள் சிக்கிக் கொண்டார். அவரை மீட்புக்குழுவினர் கூரையை வெட்டி வெளியே கொண்டு வந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
லாரி ஓட்டுநரும் காயமடைந்தார். விபத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுது பார்ப்பு செலவுகள் S$6650 மற்றும் S$608 என மதிப்பிடப்பட்டது.
நெடுஞ்சாலைச் சட்டத்தின் ஆறு மீறல்களை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நடராஜன் மோகன்ராஜுக்கு 25 மாத சிறைத்தண்டனை, $2,000 அபராதம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது.