பெட்ரூமாக மாறிய சாங்கி ஏர்போர்ட்..!!! காரணம்..??

பெட்ரூமாக மாறிய சாங்கி ஏர்போர்ட்..!!! காரணம்..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற F1 நைட் கிராண்ட் பிரிக்ஸின் போது, சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தரையில் தூங்கிய காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டது. இது இணையத்தில் பல விமர்சனங்களைத் தூண்டின.

அந்த வீடியோவில், சில பயணிகள் போர்வைகளை விரித்து தரையில் நேரடியாக படுக்கையிட்டனர். குறிப்பாக டெர்மினல் 1 வருகை மண்டபம் மற்றும் டெர்மினல் 3 செக்-இன் பகுதி இதனால் கவனிக்கப்பட்டது. F1 வார இறுதி ஹோட்டல் விலைகள் அதிகமாக இருந்ததால் (ஒரு இரவு சுமார் S$400), சிலர் விமான நிலையத்தில் நேரடியாக தூங்கவே தீர்மானித்தனர் என்று TikTok பதிவாளர் ஒருவர் தெரிவித்தார்.

சில இணைய பயனர்கள் இதை சிங்கப்பூரின் நற்பெயரை பாதிக்கும் நிகழ்வாகக் கவலைப்படுவதாகவும், சிலர் விமான நிலையம் மிகவும் சுத்தமாக உள்ளதால் அது தூங்குவதற்கு ஏற்றதாக உள்ளதாக கூறுகின்றனர்.

சாங்கி விமான நிலையத்தின் இணையதளம் பயணிகளுக்கு, குறுகிய இடைவெளி ஓய்வுக்கு பல இலவச ஓய்வு பகுதிகள் இருப்பதை அறிவுறுத்துகிறது. பயணிகள் மரியாதையாக இருக்க, சத்தத்தை குறைக்க, குப்பைகளை முறையாக அகற்ற, மற்றும் தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் விமான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK