சிங்கப்பூரில் சுற்றுலா துறையின் வளர்ச்சி எப்படி உள்ளது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூர் 2025 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1.4 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே மாதத்தை விட 5% அதிகமாகும்.
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் இரவுப் பந்தயம், உலக அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச எரிசக்தி வாரம் ஆகியவை அடங்கும்.
அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த சந்தையாக தென் கொரியா அமைந்தது. அங்கிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21% அதிகரித்து 51,000-ஐ எட்டியது. இதற்குக் காரணமாக கடந்த மாதம் தென் கொரியாவில் ஏற்பட்ட நீண்ட வார இறுதிகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சிங்கப்பூரை வந்தடைந்த சர்வதேச பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு 3% உயர்ந்து 14.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் மூன்று மூல சந்தைகள் மாறாமல் இருந்தன.சீனாவிலிருந்து 2.7 மில்லியன் பார்வையாளர்கள், இந்தோனேசியாவிலிருந்து 2 மில்லியன், மலேசியாவிலிருந்து 1 மில்லியன் பேர் வந்துள்ளனர்.