ஜூரோங் வெஸ்டில் நடந்த கொடூர விபத்து..!!78 வயது மூதாட்டியின் நிலை..??

ஜூரோங் வெஸ்டில் நடந்த கொடூர விபத்து..!!78 வயது மூதாட்டியின் நிலை..??

சிங்கப்பூர்:ஜூரோங் வெஸ்டில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 78 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் 47 வயது ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

G Road Vigilante முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி, மஞ்சள் கோடுகளுக்குள் ஒரு சிவப்பு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஒரு வயதான பெண் தனது வணிக வண்டியுடன் சாலையில் கிடந்தபடி காணப்பட்டார்.

இந்த சம்பவம் நேற்று (27.11.25) காலை 8:25 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 92 இல், ஸ்ட்ரீட் 91 நோக்கிச் செல்லும் போது நடைபெற்றது.

சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்ததாவது, விபத்தில் ஒரு காரும் பாதசாரியும் மோதியதாகவும், இந்த விபத்தில் 78 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக கூறியது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 47 வயது ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK