செயின்ட் ஜோசப்: மீண்டும் தொடங்கிய தேவாலய திருப்பலி சேவைகள்..!!!

செயின்ட் ஜோசப்: மீண்டும் தொடங்கிய தேவாலய திருப்பலி சேவைகள்..!!!

செயின்ட் ஜோசப் தேவாலயம் நேற்று(23/12/2025) மீண்டும் திருப்பலியை தொடங்கியது. பல வழிபாட்டாளர்கள் இதில் பங்கேற்க விரைவாகவும் சீக்கிரமாகவும் வந்தனர்.

சிலர் தேவாலயத்தில் நடந்த சம்பவத்திற்காக கவலையை தெரிவித்தனர். மேலும் சிலர் அதிகாரிகள் மீது நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் (21/12/2025), வெடிபொருட்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 26 வயதை சேர்ந்த சிங்கப்பூர் நபரான கோகுல நந்தன் மோகன் என்பவர் வீட்டில் வெடி பொருட்களை வைத்து தயாரித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் போலி பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்காக இதை சேமித்து வைத்துள்ளார் என்பதை தெரிய வந்தது.

இந்த நிலைமை நிச்சயமாக கவலை அழைப்பதாகவும் அடுத்து என்ன நடக்கும் அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற பயம் உள்ளது என்று ஒரு வழிபாட்டாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் ஒரு வழிபாட்டாளர் கூறிய கருத்தாவது:
இது ஒரு அரிய சம்பவம் மற்றும் எல்லோரும் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்தில் திருப்பலி நிகழ்விற்கு தலைமை தாங்கியவர் – ஃபாதர் லீ குவாங்

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK