இ-சிகரெட் அபாயம்...!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை இருந்தும் இ-சிகரெட் பயன்பாடு இளைஞர்களிடம் தொடரும் நிலையில், சட்டவிரோத தயாரிப்புகளின் அபாயங்களை எதிர்த்து நான்கு முக்கிய வர்த்தகச் சங்கங்கள் இணைய பிரபலங்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்துகின்றன.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மிலியூ இன்சைட் கணக்கெடுப்பில், இ-சிகரெட் பயன்படுத்துவோரின் விகிதம் 5.6% லிருந்து 5.3% ஆக குறைந்ததாக தெரியவந்துள்ளது. ஆயினும், பழம் மற்றும் புதினா சுவையுடன் கூடிய மின்-சிகரெட்டுகள் இளைஞர்களிடம் அதிகம் பிரபலமாக உள்ளன.
5,622 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இ-சிகரெட்டுகளை டெலிகிராம் (78%) மற்றும் வாட்ஸ்அப் (51.3%) மூலமாக வாங்குவோர் அதிகம்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் S$6 மில்லியன் மதிப்புள்ள 3.5 லட்சம் மின்-சிகரெட்டுகள் மற்றும் அதன் கூறுகளை பறிமுதல் செய்தது.
வேப்பிங் தயாரிப்புகள் ஜோகூர் பாரு, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்தும் வாங்கப்படுகின்றன.
இச்சவாலுக்கு எதிராக, நான்கு முக்கிய வர்த்தகச் சங்கங்கள் ஃபுஜோ மற்றும் கியோங்கியாவோ உணவக வணிகர்கள் சங்கம், மினி மார்க்கெட் அசோசியேஷன் மற்றும் மளிகைக் கடை சங்கம் போன்றவை இணைய பிரபலங்கள் வழியாக Instagram-இல் @stop_illegalvaping_sg கணக்கில் விழிப்புணர்வு செய்கின்றன.
இதன் மூலம், ஒழுங்கற்ற மின்-சிகரெட்டுகளின் உடல்நல ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.