சாங்கி விமான நிலையத்தில் கைதான சீன நபர்..!! காரணம் என்ன..??
கடந்த ஆண்டு(2025) டிசம்பர் 27ஆம் தேதி விமான நிலையத்தில் அலுமினிய தாழ் பயன்படுத்தி சிகரெட்டுகளை மறைத்து வைத்து 36 வயது சீன நபர் கடத்த முயற்சித்துள்ளார்.
அப்போது ஜாமான்களின் படங்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணியாளர்கள் மூலமாக அவர் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிந்தனர்.
உடனேயே அந்த சீனா நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அது தொடர்புடைய ஆதாரங்களும் சந்தேக நபரும் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு சோதனை சாவடிகள் ஆணையம் நேற்று(06/01/2026) அதன் பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.